Wednesday, February 11, 2009

அருணமலை குருரமணா ....


அருணமலை குரு ரமணா
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
மனது ஒன்று இருக்கிறதே,எனது என்று தவிக்கிறதே,
மனது ஒன்று இருக்கிறதே,எனது என்று தவிக்கிறதே,

எனது மனம் அழிந்திடவே அருள்புரிவாய்,அருள்புரிவாய்...

அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,

தனித்திருக்கும் தாகம் கொண்டேன்,தயவும் உனக்கு இல்லயோ?
பனித்த விழி நீரும் எந்தன் நிலையை கூற வில்லையோ?
இனியும் காலம் தாழ்த்தாமல் கனிவாம் பார்வை தரவேண்டும்,
பெரிதாம் பிறவி நோய் தீர்த்து இனி பிறவா வரமும் பெற வேண்டும்,
அந்தம் கடந்த ஆதியே,உனை சொந்தம் என்று பாடினேன்,
அச்சம் தோற்றும் பூமியில் வினை மிச்சம் தொலைய நாடினேன்,
கோடி கோடி அடியவரில் நான் தான் கடைக்கோடியய்யா,

அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
மனது ஒன்று இருக்கிறதே,எனது என்று தவிக்கிறதே,
எனது மனம் அழிந்திடவே அருள்புரிவாய்,அருள்புரிவாய்...

அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,

உன் பெயரை ஓதும் யாரும் உயர்ந்த ஓர் பிறவியே..
தம் துயரை தீர்க்க எமக்கு கிடைத்த ஓர் கருவியே..
உன்னை தொழுதல் பெரும்பேறு..
செய்வேன் என்ன கைமாறு...
அய்யன் அருளைப் பெருமாறு செய்தாய் அது என் அருட்பேறு...

உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும் நான் காணா நிலையும் ஆகுமோ?
என் உடலை தீபத் திரியாக்கி,அதை எரித்தால் கூட போதுமோ?
என் பிதற்றல் பிள்ளை மொழி அல்ல,ரமணன் விலக்கின் ஒளி அன்றோ?

அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
மனது ஒன்று இருக்கிறதே,எனது என்று தவிக்கிறதே,
எனது மனம் அழிந்திடவே அருள்புரிவாய்,அருள்புரிவாய்...
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,
அருணமலை குரு ரமணா,கருணை அருள் விழி வதனா,


பாடலை டவுன் லோடு செய்ய
http://www.suribaba.com/sb_IRAlbumsPgbyPgDisp.php?name=Ramanamalai&type=Mov_name&Lang=Tamil&type2=IRALBUM

Labels:

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home