Sunday, May 31, 2009

நல்ல முதலாளியும் நொள்ளை தொழிலாளியும்

நான் முன்பு சென்னையில் வேலை பார்த்தது ஒரு தனியார் ஆர்கிடெக்ட் நிறுவனத்தில்,அது அனைவருக்கும் நல்ல சம்பளம் கொடுத்து (2006 ஆம் வருடம் ஆபிஸ் பாயின் சம்பளமே 12000,அவர்களுக்கு ப்ரீமியம் பைக்கும் உண்டு ,அது தவிர மொபைல் போன் ,லோன் ,இன்னும் பல ,அப்படிஎன்றால் ஒரு ஆர்கிடேக்டோ அல்லது இஞ்சினியரோ ,என் போன்ற டெக்நிஷியன்களோ எவ்வளவு வாங்குவர் ?என்று பார்த்துக்கொள்ளுங்கள். வருடத்திற்கு குறைந்த சம்பள உயர்வே 5000.அங்கிருந்து கழுத்தை பிடித்து வெளியில் தள்ளினாலும் யாரும் அடுத்த கம்பனிக்கு போக மாட்டர்கள்.(ஐடி கம்பெனிகள் காலூன்றும் முன்பிருந்தே இப்படி FANCY சம்பளமும் காரும் உணவும் 3 மாத போனசும் கொடுத்தவர் எங்க முதலாளி.
,பத்து வருடம் அங்கே பணிபுரிந்தவர்களுக்கு முதலில் மாருதி கார்,பிறகு சென் என்று மாறும்,போதாத குறைக்கு பெட்ரோல் கார்டு வேறு அங்கே ரிசெப்ஷனில் உண்டு,அதை கொண்டு போய்
பக்கத்து ரோட்டில் உள்ள பங்கில் பெட்ரோலோ டீசலோ நிரப்பி கையொப்பமிட்டு கொண்டு வந்து மேசை டிராயரில் வைத்தால் போதும். (அளவுகளோ வரைமுறையோ கிடையாது)
மதியம் சுடச்சுட மதராஸ் மீல்ஸ் ஹாட் பாக்ஸில் மொட்டை மாடியில் தயாராக இருக்கும்.சப்பாத்தியில் ஆரம்பித்து மில்க் சுவீட் வரை.
முதலாளி தொடங்கி கடைசி தொழிலாளி வரை அது தான் உணவு .
அங்கு வேலை கிடைப்பது என்பது அமெரிக்கன் தூதரக நேர்முக தேர்வில் பாஸாவது போன்று தான்.
அதிர்ஷ்டம் மற்றும் சிபாரிசு + திறமை.
வருடத்திற்கு கண்டிப்பாக குடும்பத்துடன் கூடிய சுற்றுலா ஒரு வாரத்திற்கு கூட்டி போவார்கள்.எல்லாம் அவர்கள் செலவு.
ஒரு முறை அனைவரையும் இலங்கை அழைத்துச் சென்றனர்.
(அங்கு மாமேதை ஜெப்ரீ பாபா -இந்த நூற்றாண்டின் தலை சிறந்த ஆர்கிடெக்ட் ,அவர் வடிவமைத்த கட்டிடங்களை காண அனைவரையும் இலவசமாக கூட்டிச் சென்றனர்.)
இதை எல்லாம் குறிப்பிட்டு விட்டபடியால் என் முதலாளியை பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
இப்படி பட்ட அலுவலகத்தில் உலவும் எச்சைப்பயல்கலாய் சுரண்டல் பேய்கள் அலைந்தன,அலைந்து கொண்டு இருக்கின்றன.
1.தண்ணீர்.
அங்கு வேலை பார்க்கும் சூபர் சீனியர்களின் அடாவடி இருக்கிறதே? ..
வரும் போதே காரில் 2 அபோல்லோ தண்ணீர் காலி கேனுடன் வருவர்.
ஆபிஸ் விட்டதும் பேன்ட்ரி சென்று 2 கேனிலும் தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்வர்.இருக்கும் சீனி,பால் பவுடர் என சகலத்தையும் கபளீகரம் செய்வர்.
2. ஸ்டேஷநேரி.
இவர்கள் யாரும் தன் குழந்தைகளுக்கு தேவையான பென்சில் பேனா ஸ்கெட்சு,நோட்டு,அழி ரப்பர்,ஷார்பெநேர் ,கலர் பென்சில்,சார்ட்டு,இங்க் , பைல்கள்,டைரிகள் ,டேப்பு,பசை ,வெளியே வாங்குவதில்லை.எல்லாம் அலுவலகத்திலிருந்து திருட்டுத்தனமாகத்தான்.இதை புதியவர்கள் கண்டும் காணாமலும் போவது நலம் ,இல்லையேல் சீட்டு கிழிக்கப்படும்.
3.பெட்ரோல்
ஐயோ,இது ரொம்ப விலை உயர்ந்த வஸ்து வாயிற்றே
? என்ற கவலை இல்லாமல்.ஒவ்வொருவரும் இஷ்டத்திற்கு நிரப்பிக்கொண்டு,கையொப்பமிடாத வெற்று பில்களை வைத்துவிட்டு போய்விடுவர்.என்ன கொடுமை என்றால் அக்கா வண்டி,அண்ணன் தம்பி வண்டி என நாளொரு வண்டியில் வந்து பெட்ரோல் நிரப்பிச் செல்வார்கள்.

4.ஆபிஸ் பழைய ஏசி டிவி நாற்காலி,மேசை,கம்ப்யூடேர் என்று அவ்வப்பொழுது புதுப்பிக்கும்,அப்போது பழையவற்றை லாவகமாக சூறைத் தேங்காய் பொறுக்குவது போல பொறுக்கிச் சென்று விற்றோ, அல்லது வீட்டிலோ வைத்து விடுவர்.
5.கார் டயர்
கார் டயரைகூட இவர்கள் விடுவதில்லை,பல சமயங்களில் காரை கைகாசு போட்டு சர்வீஸ் செய்ததாய், மாற்றாத டயரை மாற்றியதை பில் வாங்கி வந்து ஏய்ப்பார்.
6.ஒருத்தர் மேல் ஒருத்தர் அவ்வளவு பொறாமையோடும் காய்ச்சலோடும் இருப்பார்,நாய் பல்லைக்காட்டிக்கொண்டு உறுமும் ,ஆனால் சண்டை போடாது.அது போல.நாளொரு கூத்து தான்.இவர்கள் எல்லா களவாணித்தனத்தையும் சேர்ந்தே செய்வதால் முதலாளிக்கு விஷயம் போகவே போகாது.இவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக செயல்படுவர்.புதியவர்களை ராக்கிங் செய்வது.முதலாளியிடம் போட்டுக்கொடுப்பது,சம்பள உயர்வு சமயத்தில் நன்கு போட்டுக்கொடுத்து சம்பளத்தை குறைத்தோ அல்லது எதுவுமோ இல்லாமல் செய்வது.தங்கள் பணிகளை குறிபார்த்து புதியவர் தலையில் வைத்துவிட்டு ஓடிவிடுவது.எதாவது பெரிய பிரச்சனை வந்தால் பழியை புதியவர் மேலும்,எதாவது பாராட்டுக்கள் வந்தால் குனிந்து தன கழுத்தை நீட்டிக்கொல்வதும் எக்ஸ்ட்ரா அசிங்கங்கள்.அதில் புதிய ஆண் ஊழியருக்கு தினமும் தரப்படும் இரவுப்பணி,(வாரத்தில் 4 நாள்)வராவிட்டாலோ மறுத்தாலோ போட்டுத்தருதல்.வேலைநீக்கம்.
முதலாளி தலை தென்பட்டால் குனிந்து குப்பையை பொறுக்குவது(அவர்களே போட்டுவிட்டு)ஒருவன் ஒருபடி மேலே போய் முதலாளியின் ரொம்ப சுத்தமான டாய்லெட்டை அவர் அறிய ஹார்பிக் போட்டு கிளீன் செய்தது,முதலாளி என்னப்பா இதெல்லாம் ?என்று பீல் பண்ணி கேட்க ..
எப்போவும் வரும் ஹவுஸ் கீபிங் ஆள் சரியாக க்ளீன் செய்யவில்லை என்றும் முதலாளி டாய்லெட்டை வாடிக்கையாளரும் உபயோகிப்பதால் தானே இறங்கி சுத்தம் செய்ததாய் பீற்ற.(முதலாளி பின் வரும் நாட்களில் யாருக்கேனும் உபதேசம் செய்ய ''அவனைப் பாருடா ...நான் சொன்னா அவன் என் கக்கூசைக்கூட கழுவுவான் என்று சொல்லுவார்.''
7. பிளஸ் 2 பெயிலான ஒருவன் தன சாமர்த்தியத்தாலும் குள்ள நரித்த்தனத்தாலும் அட்மின் டேமேஜராகி 70000 சம்பாதிப்பாநேன்றால் அது இங்கு தான்.
அதை விட கொடுமை என்றால் அவன் போடும் 15 ரூபாய் சென்ட்ரல் பிளாட்பார ஜெட்டியையும் மீறி அவன் புட்டமும் வெளியே தெரியும்படி பேன்ட் அணிவான்.பெல்ட் வாங்க மனமில்லாமல் சணல் கயிறு போட்டு கூட பேண்டை கட்டும் அந்த கபோதி.லீவு நாளில் கூட வீட்டு மனிதர்களோடு ஆபீஸ் வந்து ஓசி ஏசி ஓசி டிவி ஓசி டெலிபோன் கால்கள் ,ஓசி உணவு பண்டம் என குதூகளிப்பான்.
இதெல்லாம் விட ஒரு கொடுமை ஆபீஸ் விட்டு கிளம்பும் முன் வீட்டில் பொண்டாட்டிக்கு அவள் அம்மாவுடன் 3 மணி நேரம் பேசிக்குலாவ STD லைன் போட்டு லிங்க் கொடுத்து விட்டு தான் கிளம்புவான்.
என்ன தலை சுற்றுகிறதா?
8. இது எல்லாம் கடைந்தெடுத்த உண்மைகள்,இன்றும் நடப்பவை.
9.இவர்கள் பூர்வ புண்ணியஸ்தானம் நன்றாக இருப்பதால் திருடினாலும் மாட்டாமல் ,எங்கள் நல்ல முதலாளியின் பூர்வ புண்ணியஸ்தானம் நன்றாக இருப்பதால் ஆபீஸ் இன்னும் போண்டியாகாமலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
10.இதில் ஒரு சில கழிசடைகள் சம்பளத்தை ஆபீஸ் இலும் உழைப்பை தன் சொந்த கட்டுமான வடிவமைப்பு செய்யவும் உபயோகிக்கும்.எல்லோரும் சொந்தமாக வேறு ப்ராஜெக்ட் எடுத்து அதிலும் லாபம் பார்ப்பார்.எல்லாம் ஆபீஸ் நேரத்தில்.
அன்றாடம் அலுவலகத்தில் பேப்பர், குண்டூசி, ஸ்டேப்ளர் பின்,டாய் லேட் பேப்பர்,ஹார்பிக்,பாச்சா உருண்டை,ஒடோனில்,hand வாஷ் லிக்விட் சோப்பு போன்றவற்றையும், காபி இயந்திர ரெடிமெட் காபித்தூள், சர்க்கரை போன்றவற்றையும், குடிப்பதற்கு வைத்திருக்கும் மினரல் வாட்டரையும், "ஆட்டை'யைப் போடும் இதுபோன்ற அல்பங்கள் எப்போது தான் திருந்துமோ?

அதிகாரம்,ஜாதிவெறி,பணத்தாசை,இல்லாத அந்த மனிதர் எங்க முதலாளி ஒரே குறியுடன் தான் இயங்குகிறார்.அது தன்னிடம் வேலை பார்ப்பவன் தன்னைப்போலவே வசதியுடன் வாழ வேண்டும் என்பது தான்.அதை இவர்கள் என்றாவது புரிந்துகொண்டு ஊழலில் இருந்து வெளிவந்தால் அதுவே இந்த கட்டுரைக்கு கிடைத்த வெற்றி.

Labels:

1 Comments:

Blogger ஷண்முகப்ரியன் said...

எவ்வளவு வித்தியாசமான மனிதர்கள்!கதைகளில் கூடக் கற்பனை செய்ய முடியாத நேரடி மாந்தர்கள்.!

June 1, 2009 at 6:34 AM  

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home