Tuesday, March 10, 2009

திருவாசகம் - திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்



திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்

முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி

முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்

சக்தியும் சோமியும் பார்மகளும்

நாமகளோடுபல்லாண்டிசைமின்

சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்

கங்கையும் வந்து கவரிகொண்மின்
அத்தன் ஐயாறன்அம்மானைபாடி

ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195

பூவியல் வார்சடை எம்பிராற்குப்

பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்

மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்

வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்

கூவுமின் தொண்டர் புறநிலாமே

குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்

தேவியுந் தானும்வந்தெம்மையாளச்

செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196

சுந்தர நீறணந் தும்மெழுகித்

தூயபொன்சிந்தி நிதிநிரப்பி

இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்

எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்

அந்தார் கோன்அயன் தன்பெருமான்

ஆழியான் நாதன்நல் வேலன்தாதை

எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்

கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197

காசணி மின்கள் உலக்கையெல்லாம்

காம்பணி மின்கள் கறையுரலை

நேசமுடைய அடியவர்கள்

நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்

தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித்

திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்

பாசவினையைப் பறிந்துநின்று

பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198

அறுகெடுப்பார் அயனும்அரியும்

அன்றிமற்றிந்திர னோடமரர்

நறுமுது தேவர்கணங்கெளெல்லாம்

நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம்

செறிவுடை மும்மதில் எய்தவில்லி

திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி

முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்

காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199

உலக்கை பலஒச்சு வார்பெரியர்

உலகமெலாம்உரல் போதாதென்றே

கலக்க அடியவர் வந்துநின்றார்

காண உலகங்கள் போதாதென்றே

நலக்க அடியோமை ஆண்டுகொண்டு

நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த

மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து

பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200

சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத்

தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப

நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப

நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்

பாடக மெல்லடி யார்க்கு மங்கை

பங்கினன் எங்கள் பராபரனுக்கு

ஆடக மாமலை அன்னகோவுக்

காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201

வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்

வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்

தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்

சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி

நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி

நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை

ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202

வையகம் எல்லாம் உரலதாக

மாமேரு என்னும் உலக்கை நாட்டி

மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி

மேதரு தென்னன் பெருந்துறையான்

செய்ய திருவடி பாடிப்பாடிச்

செம்பொன் உலக்கை வலக்கைபற்றி

ஐயன் அணிதில்லை வாணனுக்கே

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203

முத்தணி கொங்கைகள் ஆடஆட

மொய்குழல் வண்டினம் ஆடஆடச்

சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்

செங்கயற் கண்பனி ஆடஆடப்

பித்தெம் பிரானொடும் ஆடஆடப்

பிறவி பிறரொடும் ஆடஆட

அத்தன் கருணையொ டாடஆட

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204

மாடு நகைவாள் நிலாவெறிப்ப

வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்

பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்

பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்

தேடுமின் எம்பெருமானைத்தேடி

சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி

ஆடுமின் அம்பலத் தாடினானுக்

காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205

மையமர் கண்டனை வானநாடர்

மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை

ஐயனை ஐயர்பிரானைநம்மை

அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்

பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்

போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள்

பையர வல்குல் மடந்தைநல்லீர்

பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206

மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்

வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்

என்னுடை ஆரமுதெங்களப்பன்

எம்பெருமான் இம வான்மகட்குத்

தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்

தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்

பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்

பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207

சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்

தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்

செங்கனி வாயிதழுந்துடிப்பச்

சேயிழை யீர் சிவலோகம் பாடிக்

கங்கை இரைப்ப அராஇரைக்குங்

கற்றைச் சடைமுடி யான்கழற்கே

பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்

பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208

ஞானக் கரும்பின் தெளியைப் பாகை

நாடற் கரிய நலத்தை நந்தாத்

தேனைப் பழச்சுவை ஆயினானைச்

சித்தம் புகுந்துதித் திக்கவல்ல

கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட

கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்

பானல் தடங்கண் மடந்தைநல்லீர்

பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209

ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ

டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல்

தேவர் கனாவிலுங் கண்டறியாச்

செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்

சேவகம் ஏந்திய வெல்கொடியான்

சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச்

சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்

செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210

தேனக மாமலர்க் கொன்றைபாடிச்

சிவபுரம் பாடித் திருச்சடைமேன்

வானக மாமதிப் பிள்ளைபாடி

மால்விடை பாடி வலக்கையேந்தும்

ஊனக மாமழுச் சூலம்பாடி

உம்பரும் இம்பரும் உய்யஅன்று

போனக மாகநஞ் சுண்டல்பாடிப்

பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211

அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி

அருக்கன் எயிறு பறித்தல்பாடி

கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்

காலனைக்காலால் உதைத்தல்பாடி

இயைந்தன முப்புரம் எய்தல் பாடி

ஏழை அடியோமை ஆண்டுகொண்ட

நயந்தனைப் பாடிநின் றாடியாடி

நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212

வட்டமலர்க்கொன்றை மாலைபாடி

மத்தமும்பாடி மதியம்பாடிச்

சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்

சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்

கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்

கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்

இட்டுநின் றாடும் அரவம்பாடி

ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு

மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்

சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்

துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்

பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்

பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு

ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு

ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214

திருச்சிற்றம்பலம்

பாடல் டவுன் லோடு செய்ய சுட்டியை தொடரவும்

Labels:

0 Comments:

Post a Comment

வலை நண்பர்களே சான்றோர்களே சொன்னது பிடித்தால் ஓட்டு & கருத்து போட்டு ஊக்கம் கொடுங்கள்.

Subscribe to Post Comments [Atom]

<< Home