Saturday, July 25, 2009

உலகில் மக்கள் சந்தோஷமாக வாழத் தகுந்த 10 நாடுகள்

லகில் மக்கள் சந்தோஷமாக, நீண்ட ஆயுளுடன் வாழ ஏற்ற நாடு எது? இதைக் கண்டுபிடிக்க சந்தோஷமான பூமி என ஒரு புதிய பட்டியலைத் தயாரித்துள்ளனர். அதன்படி 143 நாடுகளைப் பட்டியலிட்டு அதில் மக்கள் சந்தோஷமாக வாழத் தகுந்த நாடு என சிலவற்றைப் பரிந்துரைத்துள்ளனர்.

1. கோஸ்டா ரிகா

இங்குதான் மக்கள் அதிகபட்ச சந்தோஷம், நிமதியான வாழ்க்கை மற்றும் அதிக ஆயுளுடன் வசிப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள இதன் தலைநகர் சான் ஜோஸ்.


2. டொமினிக்கன் குடியரசு

உலகில் மக்கள் அதிக சந்தோஷத்துடன் வாழும் இரண்டாவது நாடு டொமினிக்கன் குடியரசு. கரீபிய தீவுக்கூட்டங்களைச் சேர்ந்தது. தலைநகர் சாண்டோ டொமினிகா.


3.ஜமைக்கா

இன்னமும் பிரிட்டிஷ் அரசியின் தலமையில் இயங்கும் நாடுகளில் ஒன்று ஜமைக்கா. உலகில் அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்து ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் உள்ள நாடு. மக்கள் மிகுந்த சந்தோஷமாகவும், பிரச்சினைகள் பெரிதாக இல்லாமலும் வாழ்கிறார்களாம். தலைநகர் கிங்ஸ்டன். பொழுதுபோக்கு, பீன்பிடிப்பது, குடிப்பது, கிரிக்கெட் பார்ப்பது!


4.கவுதிமாலா

இது ஒரு மத்திய அமெரிக்க நாடு. தலைநகர் கவுதிமாலா சிட்டியைத் தவிர, பிற பகுதிகளில் பெரிதாக போக்குவரத்து வசதிகள் கூட கிடையாது. ஆனால் மக்கள் நீண்ட ஆயுள் மற்றும் நிம்மதியுடன் வாழ்கிறார்களாம்.


5.வியட்நாம்

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட 13 வது நாடு. ஆசியாவின் முக்கிய நாடுகளுள் ஒன்று. பெயரளவுக்கு கம்யூனிஸ நாடாக இருந்தாலும், இன்றைக்கு ஆசிய அளவில் திறந்தவெளிச் சந்தைக் கொள்கையை கடைப்பிடிக்கும் நாடு இதுதான்.

விவசாயம்தான் மெயின்... அதனால் நல்ல சாப்பாடு, தரமான உணவுப்பொருட்கள், நிமதியான வாழ்க்கை என மக்கள் நிதானத்துடன் இருக்கிறாகள்.


6. கொலம்பியா

லத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்று. கொலம்பஸ் கண்டுபிடித்த நாடுகளில் ஒன்றான இங்கு சர்வதேச சந்தைப் பொருளாதாரம் எவ்வளவுதான் சுரண்டினாலும், நிம்மதியும் சந்தோஷமும் இன்னும் மக்களை விட்டுப் போகவில்லையாம். இதன் தலைநகர் பகோடா.


7.க்யூபா

உண்மையிலேயே உலகை ஆச்சரியப்பட வைத்துள்ள நாடு இது. எத்தனையோ சிக்கல்கள், தடைகள் இருந்தாலும், முன்பு புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, இப்போது அவர் தம்பி ரவுல் காஸ்ட்ரோ தலைமையில் வெற்றிநடைபோடும் நாடு இது.

இந்நாட்டு மக்களின் சராசரி வயது 78.3 ஆண்டுகள். உலகிலேயே அருமையான மருத்துவ வசதிகள் நிறைந்த நாடு. தலைநகர் ஹவானா.



8. எல் சால்வடார்

மத்திய அமெரிக்காவில் உள்ள இந்த நாடு, அப்பகுதியின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளுள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

நிச்சயம் இந்நாட்டு மக்கள் நிம்மதியாகத்தான் இருப்பார்கள். காரணம் உலகிலேயே அதிக வரிகள் இல்லாத ஒரே நாடு எல் சால்வடார்தான். தலை நகர் சான் சால்வடார்.


9. பிரேஸில்

ஜி 20 அமைப்பின் முக்கிய அங்கம். உலகின் பெரிய நாடுகளுள் ஒன்று. எல்லா வளங்களும் நிறைந்த மிகச் சிறந்த நாடான பிரேஸில், உலக அளவில் 10வது சக்தி வாய்ந்த பொருளாதாரமாகத் திகழ்கிறது. தலைநகர்: ரியோடி ஜெனிரோ

10. ஹோண்டுராஸ்

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த நாடுதான் இதுவும். நாளுக்கு நாள் இதன் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. பேராசை கொள்ளாத, குற்றங்கள் செய்யாத மக்கள் என்பதால் இந்த டாப் டென்னில் அமெரிக்காவுக்குக் கூட கிடைக்காத இடம் ஹோண்டுராஜுக்குக் கிடைத்துள்ளது. தலைநகர்: டெகுசிகல்பா


இந்த முதல் பத்து சந்தோஷமான, நிம்மதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவோ உலக வல்லரசுகள் எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவோ இல்லை!.

/world

Costa Rica tops list of 'happiest' nations

  • Story Highlights
  • Costa Rica beats out Dominican Republic as "happiest" place in world
  • Independent British group claims Costa Ricans have world's highest life satisfaction
  • Central American nation also praised for its environmental efforts
July 5, 2009 -- Updated 1256 GMT (2056 HKT)

(CNN) -- Forget Disneyland! Costa Rica is the happiest place in the world, according to an independent research group in Britain with the goal of building a new economy, "centered on people and the environment."

Costa Rica is known for its lush rain forests and pristine beaches.

Costa Rica is known for its lush rain forests and pristine beaches.

In a report released Saturday, the group ranks nations using the "Happy Planet Index," which seeks countries with the most content people.

In addition to happiness, the index by the New Economics Foundation considers the ecological footprint and life expectancy of countries.

"Costa Ricans report the highest life satisfaction in the world and have the second-highest average life expectancy of the new world (second to Canada)," the organization said in a statement.

They "also have an ecological footprint that means that the country only narrowly fails to achieve the goal of ... consuming its fair share of the Earth's natural resources."

The Central American country, tucked between Nicaragua and Panama, touts its lush rain forests and pristine beaches. Its president, Oscar Arias Sanchez, won the Nobel Peace Prize in 1987 for trying to help end civil wars in several Central American countries.

This year's survey, which looked at 143 countries, featured Latin American nations in nine of the Top 10 spots.


The runner-up was the Dominican Republic, followed by Jamaica, Guatemala and Vietnam.

Most developed nations lagged in the study.

While Britain ranked 74th, the United States snagged the 114th spot, because of its hefty consumption and massive ecological footprint.

The United States was greener and happier 20 years ago than it is today, the report said.

Other populous nations, such as China and India, had a lower index brought on by their vigorous pursuit of growth-based models, the survey suggested.

"As the world faces the triple crunch of deep financial crisis, accelerating climate change and the looming peak in oil production, we desperately need a new compass to guide us," said Nic Marks, founder of the foundation's center for well-being.

Marks urged nations to make a collective global change before "our high-consuming lifestyles plunge us into the chaos of irreversible climate change."

The report, which was first conducted in 2006, covers 99 percent of the world population, the statement said

Labels:

Sunday, July 5, 2009

அன்னையின் அருள்வாக்கு:Sunday, July 05, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

சிறிய அணுக்குண்டு பெரிய பெரிய காரியங்களைச் செய்கிறது..

நீ செய்யும் சின்னஞ்சிறிய தொண்டிற்கும் அணுகுண்டிற்குள்ள சக்தி உண்டு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

தடுமாறும் மனிதன்:

"இன்றைய மனிதனுக்குத் பாதை, செவி, உள்ளம், அழகு, முகம், கை எனும் இவை எல்லாமே தடுமாறுகின்றன. எனவே ஒவ்வொருவனும் தானாக ஆன்மிகத்தை நாடி வந்து தான் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும்."

அழுக்குகள் நீங்கவே ஆன்மிகம்:

" அழுக்குகள் சேரச் சேர அழுகல் நிலை தான் ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபட்டு அழுக்கைப் போக்கிக் கொள்ள வேண்டும். ஆன்மிகம் தான் உள்ளத்து அழுக்குகளை அகற்ற வல்லது."

சித்தன் ஆகலாம்:

" ஆன்மிகத்தால் மட்டுமே ஆனந்தம் கிடைக்கும். ஒவ்வொருவனும் சிந்தனையைத் திருத்தினால் சித்தன் ஆகலாம். பணப்பைத்தியமாகவும் , காமப் பைத்தியமாகவும் இருக்கக் கூடாது. ஆன்மிகப் பைத்தியமாக இருக்க வேண்டும்."

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

எவ்வளவுக்கெவ்வளவுப் பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுகிறார்களோ

அவ்வளவுக்கவ்வளவு உலகம் அழிவுகளிலிருந்து காப்பாற்றப் படுகிறது

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உனக்கு நீயே பகை:

"உன் எண்ணமே உனக்கு எமனாக மாறும். உன் செய்கையே நாளை செய்தியாக மாறும். உன் உருவமே உன்னை உருள வைக்கும். உனது காதே உனக்குக் கேடு விளைவிக்கும். உனது நாக்கே உனக்குச் சண்டையை உண்டாக்கிக் கொடுக்கும்.

எனவே தான் கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்ள ஆன்மிகம் தேவை.

கட்டுப்பாடு குலைந்து போனதால் தான் இன்று எங்கும் கொலை! கொள்ளை! கற்பழிப்பு! என்பன பெருகிவருகின்றன. இவற்றையெல்லாம் ஆன்மிகம் ஒன்றால் தான் கட்டுப்படுத்த முடியும். இயற்கைச் சக்திகள் அனைத்தையும் ஆன்மிகம் ஒன்றால் தான் கட்டுப்படுத்த முடியும்."

ஆன்மா ஒன்று தான் !

"தெய்வம் மனிதன் ஆகலாம்; மனிதன் தெய்வம் ஆகலாம். ஆன்மா ஒன்று தான்; ஆக்கப்படும் உருவங்கள் தான் வேறுவேறு!"

ஆன்மிகமே புகலிடம்:

"நீருபூத்த நெருப்பின் மேல் கை வைக்கும்போது சுடாது. ஆனால் அடியில் உள்ள நெருப்பு சுடும். எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் கை வைத்தால் உடனே சுடும். இன்று உலகமே நெருப்பாக மாறிவருகிறது. எங்கும் எதிலும் சுடுகிறது. ஆன்மிகம் ஒன்று தான் சிறந்த புகலிடம். ஆன்மிகத்தில் ஈடுபடுவதால் உன் ஊழ்வினைகள் குறைந்து கொண்டு வரும்."


“Meditation is useful for relaxation and fasting is helpful in exercising control over the intake of food. The menstrual cycle of women is also meant for relaxation. Relaxation does not imply laziness.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"ஓய்விற்காகத் தியானமும் உணவுக் கட்டுப்பாட்டுக்காக விரதமும் பயன்படுகின்றன. பெண்களுக்கு வீட்டு விலக்கு ஏற்படுவதும் ஓய்வு பெறுவதற்காகத்தான்! ஓய்வு என்பதற்குச் சோம்பேறித் தனமாக இருப்பது என்று பொருள் அல்ல!" - அன்னையின் அருள்வாக்கு

"கஷ்டங்கள் வரும்போது தியானத்தை மேற்கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் மௌனம் இருக்க வேண்டும்." - அன்னையின் அருள்வாக்கு

“When you face troubles, you should mediate. You should be silent for 5 minutes.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


Labels: ,

Thursday, July 2, 2009

அன்னையின் அருள்வாக்கு Thursday, July 02, 2009

“It is not a great achievement to make a great person look small but it is a great achievement to make a small person look great.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle



"பெரியவனைச் சின்னவன் ஆக்குவது சிறப்பல்ல. சின்னவனைப் பெரியவன் ஆக்குவது தான் சிறப்பு மகனே!" - அன்னையின் அருள்வாக்கு

Labels: , ,

Wednesday, July 1, 2009

அன்னையின் அருள்வாக்கு:Wednesday, July 01, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மிகத்தின் உச்சியை அடையும் திறமை

பெண்களுக்கு உண்டு.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாவிற்கு அவசியம்:

" விழா, அருள், தெய்வம், மனம் என்னும் இவைகளெல்லாம் எதற்காக? உங்கள் வளர்ச்சிக்காக! உடலுக்கு உணவு அவசியம்! ஆன்ம வளர்ச்சிக்கு ஆன்மிகம் அவசியம்!"

ஏவல், பில்லி, சூன்யம்:

" மனிதன் ஆன்மிகத்தை விட்டு நாயாகவும், பேயாகவும் மாறி அக்கிரமங்கள் செய்யும் போது வைப்பு, சூன்யம் என்பன எல்லாம் உண்டு."

இருப்பவன், இல்லாதவன்:

" இருப்பவனும் ஆன்மிகத்தில் ஈடுபட வேண்டும். இல்லாதவனும் ஈடுபட வேண்டும். ஆன்மிகத்தில் தொண்டு தான் முக்கியம். இருப்பவன் இல்லாதவனுக்குக் கொடுத்து உதவ வேண்டும். இல்லாதவன் தொண்டு செய்வதன் மூலம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்."

Labels: , ,

அன்னையின் அருள்வாக்கு:Tue, Jun 30, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

தூய உணர்வோடும், பய பக்தியோடும் தாழ்வு

மனப்பான்மை இல்லாமலும் தொண்டு செய்ய வேண்டும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

பந்தபாசம் ஆன்ம முன்னேற்றத்துக்குத் தடைகள்:

" உன் உள்ளம் வெள்ளையாக இருந்தால் நீ செய்யும் காரியமும் நன்றாக அமையும். உள்ளத்தில் கருமை இருந்தால் செய்யும் காரியத்தில் செழுமை இருக்காது.

நெஞ்சில் கோழை இருந்தால் மூச்சுவிட முடியாது. அதுபோல உள்ளத்தில் பந்தபாசம் சேரும்போது ஆன்மிகத்தில் முன்னேற்றம் இருக்காது."

தரும சிந்தனை:

" ஆன்மிகத்தில் தரும சிந்தனை இருக்கவேண்டும். பிறர் நோயைத் தன்நோய் போல நினைத்து வாழவேண்டும். அந்தக்கால மக்களிடம் இத்தகைய சிந்தனை இருந்தது."

அந்த ஒரு ஆன்மா தான்:

" அம்மா! அன்னை என்பதெல்லாம் என்ன? அந்த ஒரு ஆன்மா தான் (பரமாத்மா!).

Labels: , ,