Monday, June 29, 2009

அன்னையின் அருள்வாக்கு:Mon, Jun 29, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

கருவிலேயே ஆன்மிக உணர்வு ஏற்படுவதற்கு

விழாக்கள் வழி வகுக்கும்.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

சித்தன் யார்?

" ஆன்மிகத்தில் முழுப்பைத்தியம் கொண்டவனே சித்தன் ஆகிறான். நீங்களெல்லாம் அரைகுறைப் பைத்தியங்கள். நீங்கள் அப்படியும் இருப்பதில்லை. இப்படியும் இருப்பதில்லை."

பாவனையால் பயன் கிடையாது:

"பசை இருந்தால் தான் ஒரு பொருள் இன்னொரு பொருளுடன் ஒட்டும். அதுபோல உங்கள் ஆன்ம உணர்வுக்கும் ஆன்மிகத் தொண்டிற்கும் தொடர்பு இருந்தால் தான் பயன் உண்டாகும். தொண்டு செய்வது போலவும், ஆன்மிகத்தில் நாட்டம் இருப்பது போலவும், என்னிடம் பாவனை செய்வதால் பலன் இல்லை."

ஆன்மிகவாதிகளின் போலி வேடம்:

" வெறும் பானையை அடுப்பில் வைத்துச் சூடேற்றினால் பானை தான் வெடிக்கும். தண்ணீர் வைத்துச் சூடேற்றினால் அது கொதித்து ஆவியாகும். எதிலும் ஒரு பக்குவம் வேண்டும். கொதிநீர் பொங்கி, ஆவியாகி வெளிப்படுவது போல பொய்வேடம் போடும் ஆன்மிகவாதிகளின் வேடமும் கலைந்து போகும்."

"நாம் தவறு செய்துவிட்டுத் தீய நோக்கத்துடன் தான் வந்து கொண்டிருக்கிறோம். இருந்தும் அம்மா நம்மைத் தண்டிக்கவில்லையே என்று நினைத்துக் கொள்ளாதே! எல்லாவற்றுக்கும் சேர்த்து உனக்குச் சாட்டையடி கொடுத்தால் உன்னால் தாங்க முடியாது. அகல்விளக்கில் அகப்பட்ட விட்டில் பூச்சி போல ஆகிவிடுவாய். என்னுடைய வழிகாட்டுதலைத் தவறாக மதிப்பிட்டுத் தவறாகப் பயன் படுத்த முயலாதே!" - அன்னையின் அருள்வாக்கு

“Do not think that Mother has not punished you through you have sinned and proceed with evil intention! If I whip you for all your sins put together, you will not be able to bear. You will be like a moth caught in the flame of a lamp. Do not wrongly estimate My guidance and try to make use of it in a wrong manner.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

Labels: , ,

Friday, June 26, 2009

அன்னையின் அருள்வாக்கு: Fri, Jun 26, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

உன் ஆன்மாவே கடவுள். உன் ஆன்மா

தான் சக்தி. சக்தி தான் ஆன்மா.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்ம பரிபக்குவம் ஏற்படவேண்டும்:

" பாலை நன்றாகக் காய்ச்சிப் பக்குவமான சூட்டில் அதனோடு புளிப்புப் பொருளைச் சேர்க்கும் போது அது தயிராக மாறுகிறது. அந்தத் தயிரிலிருந்து வெண்ணெய் கிடைக்கிறது. அது தண்ணீரிலும் மிதக்கிறது.

அதுபோல மனித உடலுக்கு ஆன்மா என்ற புளிப்புப் பொருள் சேர்ந்தால் தான் மனம் பக்குவம் அடையும்.

மோரான பிறகு அது பாலாக மாற முடியாது. அதுபோல மனிதனின் ஆன்மா பக்குவம் அடைந்துவிட்டால் அவன் கெட்ட வழிக்கு மாற முடியாது.

ஆன்மா பக்குவம் அடைய வேண்டுமானால் உலகத்து உயிர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும். தருமம் செய்யவேண்டும். விரதங்களை மேற்கொள்ள வேண்டும்."

மெய் விளையாட்டும் பொய் விளையாட்டும்:

" ஒரு புறம் இங்கே ஆன்மிகம் வளர்கிறது. இன்னொருபுறம் அழிவுகள் வளர்ந்து வருகின்றன. இங்கு நடப்பவை தான் மெய் விளையாட்டு. அங்கு நடப்பவையெல்லாம் பொய்விளையாட்டு.

வேள்வி, வழிபாடு, இருமுடி, தியானம், தொண்டு, விரதம், பூசை, அங்கவலம், பாதயாத்திரை, முதலிய தெய்வீகம், ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகள் மெய்விளையாட்டு.

ஆன்மிகம் தொடர்பான மெய்விளையாட்டில் கலந்துகொண்டால் ஆன்ம முன்னேற்றம் பெறலாம். மற்ற பொய் விளையாட்டுகளில் கலந்து கொண்டால் அழிவு தான் மிஞ்சும்."
“It is best for you to come here once or twice a month. It is not enough if you just come and go or perform the ritual worship. Whenever you come here you should spend atleast two or three minutes in meditation.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை இங்கே (மேல்மருவத்தூர் ஆலயத்திற்கு) வந்து செல்வது உனக்கு நல்லது. ஏதோ வந்தோம் போனோம் என்று இருக்கக்கூடாது. எனக்கு அர்ச்சனை செய்துவிட்டால் மட்டும் போதாது. இங்கே வரும்போதெல்லாம் இரண்டு அல்லது மூன்று நிமிட நேரம் தியானம் செய்துவிட்டுச் செல்!" - அன்னையின் அருள்வாக்கு

Labels: , ,

உலகின் அழகிய ,விந்தையான, சிக்கலான விமானதளங்கள்
























Labels: , ,

Thursday, June 25, 2009

ஐக்கிய அரபு நாட்டில் ஒன்றான அபுதாபியில் 221வது பிரதோஷ பூஜை

அபுதாபியில் 221வது பிரதோஷ பூஜை

செய்தி நன்றி :-தினமலர்

ஜூன் 25,2009,13:03 IST

அபுதாபி: அபுதாபியில் பிரதோஷக் குழுவினரால் 221வது பிரதோஷ பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இது சனிப்பிரதோஷம் என்பது இப்பூஜைக்கு கூடுதல் சிறப்பைத் தந்தது. கணபதி பூஜையுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில் பூர்வங்க பூஜை, கும்ப ஆவாகணம், மகன்யாச ஜபம், ஸ்ரீ ருத்ர அபிஷேகம், நந்தி அஷ்டோத்திரம், சிவ அஷ்டோத்திரம் ஆகியன நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவ பெருமானுக்கு நல்லெண்ணை, பஞ்சவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, இளநீர், எலுமிச்சை சாறு, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. இப்பூஜைகள் அனைத்தும் வேத அமைப்பைச் சேர்ந்த குமார் என்பவரால் நடத்தி வைக்கப்பட்டது. இந்த சிறப்பு மிகுந்த சனிப் பிரதோஷத்தில் நந்திகேஸ்வரருக்கு நந்திகேஸ்வர அஷ்டோத்திரம் பாராயணம் செய்யப்பட்டது. மேலும் சிவபெருமானுக்கு பொங்கல், காப்பரிசி, தேங்காய் சாதம், தயிர் சாதம், வடை, சுண்டல், பஞ்சாமிர்தம் ஆகியன நைவேத்தியம் செய்யப்பட்டு, பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்டு வரம் இந்த பிரதோஷ பூஜையில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Labels:

Wednesday, June 24, 2009

அன்னையின் அருள்வாக்கு: Jun 24, ௨009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

கோயில் சிலையை விட ஆன்மாவிற்குத் தான் சக்தி உண்டு.

உனக்குள் உள்ள அந்த ஆன்மா தான் ஆதிபராசக்தி.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

உடலும் ஆன்மாவும்:

" உடம்பு தான் கோயில். உன் உள்ளேயிருக்கும் ஆன்மாதான் சிலை!"

உங்களைப் பதப்படுத்த...

" வெள்ளிக்குத் தங்க முலாம் பூசினாலும், செம்புக்குத் தங்க முலாம் பூசினாலும் காலப்போக்கில் வெளுத்துவிடும். நெல்லில் பதர் உண்டு. அதுபோல ஆன்மிகத்திலும் பதர்கள் உண்டு. உங்களையெல்லாம் ஆன்மிகத்தில் பதப்படுத்திக் கொண்டு வருகிறேன்."

நாளும் சிந்தனை செய்!

" எதற்காக வாழ்வு? எதற்காகப் பாசம்? எதற்காகச் சுகம்? எதற்காக மதி? எதற்காகப் பதவி?எதற்காக நினைக்கும் தன்மை? எதற்காக ஏற்றுக்கொள்ளும் தன்மை? எதற்காகத் தாய் தந்தை? எதற்காகத் தருமம்? ஆன்மா என ஒன்று இருக்கிறதா? அது ஏன் இருக்கிறது? - என்றெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து உண்மையை உணரவேண்டும்."

“If you earn a little money in the wrong way, it will goad you to lead a luxurious life. It will subsequently lead to the condition of becoming a slave for the sake of that little money.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"தவறான முறையில் நான்கு காசு சம்பாதித்தால் அதைப் கொண்டு ஆடம்பரமாக வாழத் தோன்றும். பிறகு அந்த நான்கு காசுக்காக அடிமையாகும் நிலை ஏற்படும்." - அன்னையின் அருள்வாக்கு

Labels: ,

Tuesday, June 23, 2009

அன்னையின் அருள்வாக்கு:Wed, Jun 24, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

"ஆசைகள் குறையக் குறைய ஆன்மா அமைதி பெரும்

எதையும் தாங்கும் சக்தி பெரும்."

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மிகம்: தொப்புள்கொடி!

" தொப்புள்கொடி என்ற குழாய் மூலமே தாயின் கருவிலுள்ள குழந்தை வளருகிறது. அதுபோல ஆன்மிகம் என்ற குழாய் மூலமே மனித இனம் வளர்ச்சி அடைகிறது."

ஆன்ம வளர்ச்சி:

" செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்தால் தான் காடு வளரும். காடு வளர்ந்தால் தான் உலகிற்கு மழை வரும். அதுபோல உங்களிடம் ஆன்மா வளர்ந்தால் தான் உலகில் ஆன்மிகமும் வளரும்."

ஆன்மிகத்தின் சக்தி:

" இரும்பை ஈர்க்கும் சக்தி காந்தத்திற்கு உண்டு. அதுபோல எதையும் இழுக்கும் சக்தி ஆன்மிகத்திற்கு உண்டு."

Labels: , ,

அன்னையின் அருள்வாக்கு:tue, Jun 23, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!

அன்னையின் அருள்வாக்கு:

“When you begin to utter the letters in Language you can not understand its importance. But this training is the base for your future education. Similarly you can not understand the importance of my training. This training forms the base for your future progress in spirituality. You would understand its importance later in the course of time.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle

"அ- - என்ற எழுத்துக்கள் ஆரம்பத்தில் எழுதிப்படிக்கும் போது அதனருமை தெரியாது. ஆனால் அந்தப் பயிற்சி தான் உங்கள் பிற்காலப் படிப்பிற்கு அடிப்படை. அதுபோல இங்கே நான் தருகிற இந்தப் பயிற்சிகளின் அருமை இப்போது உங்களுக்குத் தெரியாது. உங்களின் பிற்கால ஆன்மிக முன்னேற்றத்திற்கு இந்தப் பயிற்சி தான் அடிப்படை. இவற்றின் அருமைகள் காலப்போக்கில் பின்னால் தான் தெரியும்." - அன்னையின் அருள்வாக்கு


“Even if you starve, you must feed ten hungry persons. It will be beneficial to your body to starve on the one hand, and you will also gain the blessings of those people on the other hand. A mother is unburdened when she feeds her child. The child is happy too! Similarly the burden of your sin is reduced by the free distribution of food. At the same time the people who are fed become happy.” – Mother Goddess Adhiparasakthi’s Oracle


"பட்டினியாக இருந்தாலும் பத்து பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.அப்படிப் பட்டினி கிடப்பதால் உன் உடலுக்கு ஒருபுறம் நன்மை. இன்னொருபுறம்உன்னால் பயன் பெற்றவர்கள் வாழ்த்துகின்ற வாழ்த்துக்களால் நன்மை. தாய்குழந்தைக்குப் பால் கொடுப்பதால் அவளது பாரமும் குறைகிறது. குழந்தைக்கும்மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதுபோல, அன்னதானத்தால் உன் வினைப்பாரமும்குறைகிறது. மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி விளைகிறது." - அன்னையின்அருள்வாக்கு



Labels: , ,

Monday, June 22, 2009

அன்னையின் அருள்வாக்கு:Mon, Jun 22, 2009

ஓம் சக்தி ! பரா சக்தி !

குருவடி சரணம் ! திருவடி சரணம்!


அன்னையின் அருள்வாக்கு:

ஆன்மா வளர வேண்டுமானால்

தொண்டும், பக்தியும் தேவை.

அன்னையின் அருள்வாக்கு பெட்டகத்திலிருந்து:

ஆன்மிகம்:

ஆன்மாதான் சக்தி!

" தாய் தந்தையர் மூலம் தான் உருவம் உண்டாகிறது. அந்த உடலுக்குச் சக்தி கொடுப்பது எதுவோ அதுவே ஆன்மா! அந்த ஆன்மாதான் சக்தி! ஆன்மா இல்லையென்றால் இங்கே எந்தப் பொறுப்பும் இல்லை. மனிதனின் ஆன்மாவைப் விட மிருகத்தின் ஆன்மா வைரம் பாய்ந்தது.

மனிதனின் ஆன்மா பக்குவம் அடையவேண்டும். அதற்கு ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தியானம் இருக்கவேண்டும். எதிலும் மௌனத்தைக் கடைபிடிக்க வேண்டும்."

ஆணவம் கூடாது:

" ஆன்மா ஆன்மாவாக இருக்கவேண்டும். அதில் ஆணவம் இருக்கக் கூடாது. ஆணவம் சேர்ந்தால் அனாதையாக வேண்டியிருக்கும்."

Labels: , ,

"Downtown Burj Dubai"

துபாயின் இரண்டு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட "Downtown Burj Dubai" என்னும் ஒருங்கிணைந்த கட்டுமானங்கள் ,உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் டவர்,தி அட்ரஸ் ஹோட்டேல் ,உலகின் பெரிய துபாய் மால் ,புர்ஜ்ஓல்டு டவுன் ,மற்றும் நடன நீரூற்றுகள்,அழகிய செயற்கை ஏரி என பூலோக சொர்கமாக காட்சி தருகின்றது. ஒரு கார் மட்டும் இருந்தால் போதும் காலையில் இந்த துபாய் மாலுக்குள் நுழைந்தால் இரவு பனிரெண்டு மணி வரை சுற்ற விஷயம் இருக்கிறது. கார் பார்க்கிங் இலவசம்,அதுவும் எக்கச்சக்கமாக கிடைக்கிறது. வீட்டில் அனைவரும் கண்டு வியக்க உலகின் பெரிய அக்வாரியம் ரொம்ப ரொம்ப பெரிசு,உள்ளே திமிங்கிலம் முதல் கடல் பசு,நீர் நாய் என அனைத்து கடல் வாழ் உயிரினமும் காணலாம்.வெளியே இருந்து காண இலவசம். உள்ளே செல்ல ஒருவருக்கு 50 திர்காம்கள்.(WORTHTH IT ) வெளியே இருந்து பார்க்கையிலேயே அவ்வளவு ஆனந்தம் பொங்குகிறது.உள்ளே இருக்கும் "அண்டர் வாட்டர்"ZOO விற்கு சென்றால் அபார ஆனந்தம்.கொடுத்து வைத்தவர்கள் ஆகின்றோம். கண்ணாடி கணம் மட்டும் 2 அடியாம் ,இவ்வளவு பெரிய கண்ணாடியை எப்படி இணைத்தார்கள்?ஒரு தடயமும் இல்லை. எங்கு பார்த்தாலும் வியப்பு தான்.உலகின் மிகப்பெரிய "lcd" டிவி திரை ,மிக பிரம்மாண்டம். அப்புறம் ஐஸ் ரிங்க் ,இதுவும் உலகின் மிகப்பெரிய ஐஸ் ஸ்கேடிங் செய்யும் மைதானம். யார் வேண்டுமானாலும் போய் சறுக்கி பழகலாம். முதலில் 15 நிமிடம் பயிற்சி மட்டும் தேவை,அதற்க்கு என்று தனி "TRACK" உண்டு. அதற்க்கு உரிய உபகரணங்கள் நுழைவாயிலிலேயே தருகின்றனர்.ஒரு மணி நேரம் விளையாட 50 திர்காம்கள்.(WORTHTH IT ) அப்படி விளையாட பயமாக உள்ளதா?சும்மா வேடிக்கை பாருங்கள் ,நினைத்து பாருங்கள் . சுமார் முன்னூறு பேர் சறுக்கி விளையாடும் ஒரு ஐஸ் மைதானம்.குளு குளு காட்சிகள் என.நகரவே மனமிருக்காது.பார்வையாளர் அரங்கமும் உண்டு. அப்புறம் நான் நுழைவாயிலிலேயே ரொம்ப ரசித்து பார்த்தது அந்த "INDOOR FOUNTAIN" தான் சுமார் இருநூறு அடி உயரத்திலிருந்து நீர் கொட்டுகிறது.அதில் நிர்மாணிக்கப்பட்ட கைகளை விரித்த ஆண்களின் தலைகீழாக குதிக்கும் மெட்டாலிக் பொம்மைகள் ,எப்படி பொருத்தியிருக்கிறார்கள் என்று பார்த்தால்? ஆண் குறியை அந்த நீர் விழும் பள்ளத்தாக்கு பகுதியில் பொருத்திவிட்டனர்.என்ன ஒரு கலை?கற்பனை. இதையெல்லாம் எழுத ஒரு கட்டுரை போதாது. அப்படியே பின்னால் சென்று செயற்கை ஏரிக்கு சென்றால்.புர்ஜ் டவரின் கம்பீரம் ,இந்த பக்கம் பார்த்தால் தி அட்ரெஸ் ஹோடெலின் கொள்ளை அழகு. அப்படியே அங்கு அமர்ந்து ஒவ்வொரு வினாடிக்கும் மாறி மாறி வளைந்து நெளிந்து காற்றில் கோலம் போட்டு.பாய்ந்து,துள்ளும் அந்த நீர் ஊற்றுக்கள் . இந்த வெயில் காலத்திலும் அவ்வளவு கூடம் வருகிறது.வர்ணஜாலம் காட்டுகிறார்கள் (மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்து இரவு பனிரண்டு மணிக்கு முடிகிறது) நல்ல காமிரா கொண்டு போகவும். அப்புறம் வருந்துவீர்கள். நான் அந்த கடைகளை பற்றியெல்லாம் சொல்வது அவசியமில்லை.ஏனென்றால் துபாய் என்றாலே ஷாப்பிங் தான் .அது பாட்டுக்கு ஆயிரம் கடைகள் உள்ளது.எவ்வளவு உணவகங்கள்?நகைகடைகள், சம்மர் ஷாபிங் (25 சதம் தள்ளுபடி)செய்யும் மக்கள் ஆர்வமாக செலவு செய்வதை பார்க்க முடிகிறது. எல்லாமே பார்க்க இலவசமே. நான் "DEISEL" என்னும் ஷோரூமின் வித்தியாசமான வடிவமைப்பை (பழைய தேய்ந்து போன டையரை குவித்திருந்தனர்-டயர் தேயுமாம்,வீணாகுமாம் ,அனால் இவர்கள் ஜீன்ஸ் அப்படி உழைக்குமாம்) உள்ளே சென்று ஒரு ஜீன்ஸ் பேண்டின் விலை பார்த்தேன் 2000 திர்காம் என போட்டிருந்தது. எனக்கு தலையே சுற்றியது(26000 ரூபாய்கள்)எழுத்தாளர் சாரு நிவேதிதா கூட அவ்வளவு கொடுத்து வாங்குவாரா ? என சந்தேகமே.நம்மூரில் அந்த பிராண்டை சீனாக்காரர்கள் காப்பி அடித்து தெருவில் தொப்பிகளாய்,வாட்சுகளாய்,செண்டு ,சட்டை ,டெனிம் ,ஸ்கூல் பேக்,கண்ணாடிகள் என 80 மடங்கு விலை குறைத்து உலகமயமாக்கம் செய்ததை எண்ணி புளங்காகிதம் அடைந்தேன். இன்னும் தொடரும்.



































































































































































Labels: